பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 10, 2011

கூடல் பொழுதொன்றில்...


எப்பொழுதும் உன் வருகைக்காய்
விழித்திருக்கிறது என் இரவு
தேய்ந்து போன நிலவொன்றின்
ஏக்கங்களை சுமந்த படி...
சிவந்து போன தடயங்களோடு
இன்னும் மீதமாக இருக்கிறது
மென்மையான உதடுகளின்
சில நொடிகள் வன்முறை...
நிலவுக்கான அல்லியாகவும்
பசித்த புலியாகவும் முரண்பட்ட நிலையில்
நானிருந்தேன் உன் நெருங்கிய
முத்தத்தின் பிடியில்...
நீ இன்னும் எதற்கு காத்திருக்கிறாய்
இதுவரை அறிந்திராத ருசிக்குத்
துடிக்கும் உன் உதடுகளில் தெரிகிறது
பகல் முழுதும் மறையும் வேட்கை...
உறக்கம் இல்லா இரவுகளின் நீட்சியில்
உனக்கென நானும் வைத்திருக்கிறேன்
கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில்
சம்மதிக்கும் பார்வையொன்றை...

No comments: