பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 3, 2011

நீ இல்லா நொடிகளில் 3


புகைப் படங்களில் கோரும்
மன்னிப்பை உன்னிடம்
சொல்லிப் போகலாம்
என் தீர்ந்து போன
கனவுகள்...

எனை பார்க்க மறுக்கும்
உன் கண்களில்
என்றும் பிம்பங்களை
மறைப்பவனாகவே நான்...

நீ எழுதத் தொடங்கிய
என் வாழ்க்கையின் வரிகளில்
அடிக்கடி முற்றுப் புள்ளிகளை
வைத்தவன் நான்...

ஒவ்வொரு பேருந்துப்
பயணமும் உன்னை
சந்தித்த பயணத்தை
நினைவு படுத்த
வெடித்தழுகிறது இயலாமை...

எனக்கு நானே சுமக்கும்
சிலுவை ஒன்றில்
உன் நினைவுகளின் பாரத்தை
ஏற்றி வாழ்வின்
மீத நாட்களில் சுமப்பேன்
வார்த்தைகளின் சவுக்கடிகளோடு...

என் வாழ்வின் இறுதி
நொடிகளில்
ஒருவேளை நான்
மகிழ்ந்தால்
உன்னோடு வாழ்ந்த
இந்த நாட்களின்
நினைவுகளால் மட்டுமே...

No comments: