பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 3, 2011

நீ இல்லா நொடிகளில் 2


தவறுகளை சுட்டிக் காட்டவும்
தட்டிக் கேட்கவும்
யாருமின்றி தவறுகளோடு
என் நாட்கள்...

விலை மதிக்க இயலாப்
பரிசினை தெரிந்தே
தொலைத்த பின்
வீணாய் அழுதென்ன
புலம்பியென்ன...

வறண்டு போன
கனவுகளையும்
கவிதைகளையும்
இனி நட்டு வைப்பேன்
பாலை நிலங்களில்...

கவிதைகள் எப்பொழுதும்
அமைதியாகவே
வாசிக்கப் படுகிறது
அது அமைதி இல்லாத
ஒரு இதயத்தின் அழுகையென
மறக்கப் பட்டு...

நடிக்கத் தெரியா
மனதில் ஆயிரம்
கேள்விகள்
முதல் கேள்வி உன்னிடமிருந்து...

என் எழுத்துகளே
தலை எழுத்தை
மாற்றுமென சொன்னவளுக்கு
வெற்று தாள்களில்
வேதனை கொடுத்தவன் நான்...

தவறுகளுக்கு
தண்டனைகளை தவிர்த்து
விடுதலை செய்கிறாய்
உன்னிடமிருந்து
இனி நான்
யாரென்ற அடையாளம்
தொலைக்க சில
நொடிகள் போதும்...

No comments: