பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 13, 2011

மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?


ஆகவே தான் கேட்கிறேன் நீங்கள்
மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா என்று?
அவர்கள் எப்பொழுதும்
நிலைத் தன்மையையும்
நம்பிக்கையையுமே எதிர் பார்கின்றனர்
நானோ சாகசத்தையும்
தெரியாத புதிரையும்...
நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்
நானும் உங்களை..சரி தானே!
தோழமை உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்றால்
"ஆமாம்" என்பேன்
நீ இல்லாமல் தனியாக வாழ முடியுமா என்றால்
அதற்கும் "ஆமாம்" என்பேன்...
ஆண்களே எப்பொழுதும்
ஒரு வீட்டை நிர்வகிக்க
காதல் செய்ய
குழந்தைகளை வளர்க்க
பணம் சம்பாதிக்க
வெற்றியாளராக விளங்க
அனைத்துமாய் எதிர் பார்க்கப் படுகிறான்..
உங்கள் நாடி நரம்புகளில்
பரவசம் ஓடிக் கொண்டிருக்க வேண்டுமென்பதே
உங்கள் விருப்பமாய்...
ஆனால் அதில் ரத்தம் தான்
ஓடிக்கொண்டிருக்க வேண்டுமென்பதை
மறந்து விடுகிறீர்கள்...
நான் வற்புறுத்தினால்
எப்பொழுதும் இல்லாத ஒன்றைப் பற்றி
அதிக பணமும் சுதந்திரமும் வேண்டும் இல்லத்தரசி
காதலியை இழந்து விடுவோமோ என
பயந்து கொண்டிருக்கும் காதலன்
விரும்பிய பேரத்தை முடிக்காத வியாபாரி
பாடகராக விரும்பும் வைத்தியர்
அரசியல்வாதியாக விரும்பும் பாடகர்
விவசாயியாக விரும்பும் எழுத்தாளன்
இப்படி என்னவெல்லாமோ...
ஆகவே உங்களை மீண்டும்
ஒருமுறை கேட்கிறேன்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

No comments: