பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 17, 2012

ஆம், இப்படித்தான்...

எல்லோரிடமும் விலகிக் கொண்டிருக்கிறேன்
காரணங்கள் எதுவுமின்றி
என்னை நேசிப்பவர்களிடமிருந்து
என்னை வெறுப்பவர் களிடமிருந்து
எந்த இலக்கணமும் இல்லா
இக்கவிதையிடமிருந்து
எல்லா வெளிச்சங்களும் இருளின் புகைபோக்கிகளே
என்னை நேசிக்கவோ
என்னை வெறுக்கவோ
உங்களிடம் ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்
அப்படி என்னிடம் எதுவுமில்லை தான்
என் மீதான அச்சம் என்பது
ஆகச் சிறந்தது
எனக்கான நிலையின்மை என்பது
சலிப்பானது
முடிவுகள் எடுப்பதில்லை எனும் போதும்
எனது செயல்கள் எனது முடிவுகளாகின்றன
ஒரு இறகு முளைத்த மீனென
பற்கள் முளைத்த பறவையென
இன்னும் எதோ ஒன்று தேவைப்படுகிறது
சுடும் சொற்களில்
பன்னீர் துளியின் நறுமணம்
அடங்கா காதலின்
அத்துமீறல் துயரங்கள்
இப்படி எதையாவது சொல்லிக் கொண்டிருத்தலில்
எதுவுமில்லை
எல்லோரிடமிருந்தும் விலகத் தொடங்கினேன்
என்னை நேசிப்பவர்களிடமிருந்தும்
என்னை வெறுப்பவர்களிடமிருந்தும்...



No comments: