பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 28, 2011

சொல்லாத நிஜங்கள்


ஏதோ ஒரு சுமையை
மனதில் ஏற்றி விட்டதாய்
குழம்பித் தவிக்கும்
பொழுதுகளில் நான்...
என்ன செய்யப் போகிறாய்
என்னை நீ
இப்படியே தவிக்க விடுவதால்
முரண்பட்டு திரிகிறது
எனது நாட்கள்...
பேச வேண்டும் என
பேசும் சொற்களில்
நிறைய உணமைகளை
மறைத்து விடுகிறாய் போலும்...
மரகொத்தி ஒன்றின்
இடைவிடா முயற்சியென
துளைகளாகிக் கொண்டிருக்கிறது
வினாக்களின் விசாரணை...
குரல்வளை இருக்கும்
கயிருகளென திணறிக்
கொண்டிருக்கிறேன் என்
தனிமைப் பொழுதுகளில்...
விடுபட நினைத்து
உயிர் கழற்றும் வேளையில்
கனவுகளோடு வருகிறாய்
கரங்களை பிடித்துக் கொள்ள...
முடிவிலா ஏக்கங்கள்
திசை தேடும் பயணங்களென
உன்னை தேடும் என்
உயிர் காற்றில் நிரம்பி
தவிக்கிறது நமக்கான
ஒரு வாழ்வு...

No comments: