பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 26, 2007

கறுப்புமையும், தனிமையும்


நான் கவிதை எழுதும் போது

தீர்ந்து போகும் பேனாவின்

மையை போலவே

அதிவிரைவில் முடிந்து போகிறது

என் காதலின் கனவுகளும்...


பென்சிலின் கறுமையான‌

எழுத்துகளில் வெளிப்படுகிறது

என் தனிமையின் புலம்பல்

என்றபோதிலும்

அவ்வளவு சீக்கிரம்

தீர்ந்து போவதில்லை

பென்சிலின் கறுப்பு மையும்

என் தனிமை குரலும்....

No comments: