பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 30, 2007

கண்டதை எழுதுகிறாய்

ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்குமான
இடைவெளியில் செல்லும் ஒரு மரண ஊர்வலம்....

காட்டு குயிலோடு போட்டியிட்டு கூவி
தண்ணீர் தேடும் வீட்டுப் பறவை....

நாள் காட்டியில் விரைவாய் கிழிபடும்
காகிதங்கள் யாருடைய இறுதி நாளைத் தேடி....

இன்று மதியம் உணவு கிடைத்தது
இனி இரவுக்கு யாரைத் தேட...

எழு ஜென்மங்கள் உண்டாம் கொடுமை
எல்லாவற்றிலும் நான் மனிதன் ....

பொதி சுமக்கும் கழுதை போல
நினைவுகள் குட்டிசுவர் தேடி புறப்படுகிறது....

காரமான குழம்பு, ரசம் குடித்து
அதிலும் காரமென தயிர் தேடுகையில்
நிறைந்து விடுகிறது பசித்த வயிறு...

என்னடா இது கண்டதை எழுதுகிறாய்
என்ன செய்ய? சொல்லாமல் விட்டதை நீ புரிந்துகொள்...

No comments: