பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 26, 2007

நான் கேவலமானவனே


புதிதாக நான் எதை பற்றி

எழுதப் போகிறேன்

எல்லாமே பழகிப் போய்விட்டது

என் கனவுகளையோ

மகிழ்வுகளையோ

ரணங்களையோ...


கண் நிறைத்த இடங்களையோ

கவர்ந்த பெண்களையோ

ரசித்த கவிதை ஒன்றை பற்றி சிலாகித்தோ

வேறு என்ன இருக்க போகிறது

என் கவிதைகளில்....


என் தவறுகளை மறைத்து

எழுதும் இவற்றில் என்ன உண்மை

இருக்கப் போகிறது

நெருப்பால் சுட்டால் எரிவது போல‌

என் நிதர்சனமும் தினமும்

சுட்டு பொசுக்குகிறது என்னை...


என் கேவலங்கள், காம வக்கிரங்கள்

சுயனலம், பொறாமை மறைத்து

காதலையும்,மலர்களையும்

தென்றலயும் மட்டுமே

எழுதுவதால் நான் என்னில்

யோக்கியமாகி விட முடியாது..


இங்குள்ள அனைவரையும் விட‌

நான் கேவலமானவனே....

கறுப்புமையும், தனிமையும்


நான் கவிதை எழுதும் போது

தீர்ந்து போகும் பேனாவின்

மையை போலவே

அதிவிரைவில் முடிந்து போகிறது

என் காதலின் கனவுகளும்...


பென்சிலின் கறுமையான‌

எழுத்துகளில் வெளிப்படுகிறது

என் தனிமையின் புலம்பல்

என்றபோதிலும்

அவ்வளவு சீக்கிரம்

தீர்ந்து போவதில்லை

பென்சிலின் கறுப்பு மையும்

என் தனிமை குரலும்....

Oct 19, 2007

எனக்கும் ஆசைகள் உண்டு


மெளனமாய் வெளிப்படுகிறது

என் விசும்பல் சத்தம்...


உனக்கும் சுதந்திரம் உண்டு

ஆம் பெண்ணே...

உனக்கும் சுதந்திரம் உண்டு...

உனக்காக நான் வெட்டிய விரல் நகங்கள்

உனக்காக நான் மாற்றி கொண்ட என் புகை பழக்கம்

உனக்காக நான் மறந்து போன என் கல்லூரி தோழிகள்

என் சிறு வயது நட்புகள்

என் காகித கிறுக்கல்கள்

என எல்லாமே...


ஆனாலும் என் வெற்றிகளுக்கு ஆசைப்படும் நீ

என் தோல்விகளை மட்டும் மறுக்கிறாயே...


என் புன்னகைகளை அலங்கரிக்கும் நீ

என் கண்ணீர்துளிகளுக்கும் காரணமாய்...


இருவருமாய் இது வரை திரைப்படம்

சென்றதில்லை உனக்கு பிடிக்காது

பூங்கா ரசித்ததில்லை

உனக்கு பிடிக்காது

உணவகங்கள் செல்வதில்லை

உனக்கு கூச்சம்


அனைவருக்கும் உடைகள்

உன் தேர்வில் மட்டுமே

பயணங்கள் உன் விருப்பத்தில்

பண்டிகைகள் உன் விருப்பத்தில்

உறவுகள் உன் விருப்பத்தில்....


எனக்கும் ஆசைகள் உண்டு

எப்பொழுது புரியும் உனக்கு....

Oct 16, 2007

காதல் அரசி

பெண்ணே, நீ யார் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது... குழம்பி திரிவேன்... பிறகு தான் தெரிந்தது நீ காதல் தேசத்தின் அரசி என்பது... இது வரை வரலாறுகள் அனைத்தும் உலகின் பெண்கள் பலரை காதலின் இள்வரசிகளாகவே அங்கீகரித்து வந்திருக்கிறது... அரசிக்கான இடம் மட்டும் நிரப்பபடாமலேயே... நீ ஜனிக்கும் அந்த நாள்வரை...
மணிமகுடங்கள் தேடி செல்லும் அரசர்களுக்கும், வீரர்களுக்கும் மத்தியில் காதலின் கீரீடம் மட்டும் உன்னை தேடி வந்து தன்னை அலங்கரித்து கொண்டது... மற்றவர்களெல்லாம் வழிவிட்டு நின்றதை பார்த்திருக்க மாட்டாய், நான் அறிவேன்... அனைவரும் ஏக்கதுடனும், பொறாமையுடனும் பார்த்து கொண்டிருக்கும் போதே காதல் உன்னை அரசியாக ஏற்று தன்னை என்றும் நிலை நிறுத்திக் கொண்டது.உன் முக பொலிவின் முன் காதல் கூட சற்றே வெளிச்சம் குறைந்தது உண்மை தான்.
பெண்ணே இனி நீ எச்சரிக்கையாய் இரு.. உனக்கான சுயம்வரத்தில் காத்து கிடக்கும் இளைங்ஞர்கள் எத்தனையோ எனக்கு தெரியாது....