
நிஜம் என நெருங்கவும் இல்லை..
நிழல் என விலகவும் இல்லை..
காத்திருக்கிறேன்
எனக்காக என்றாவது பொழியும்
என் மேகம்....
சிறகு முளைத்து
உயரப் பறக்கிறேன்
உதிர்ந்து கிழ் விழும் போது
நீ தாங்கிக் கொள்வாய் என்ற இறுமாப்பில்...
நேற்றிரவு நல்ல மழை..!!!
எப்படித் தான் முடிகிறதோ
உன்னால் மட்டும்...
கதகதப்பான ஒரு முத்தத்தில்
என் குளிர் விரட்ட....
கடற்கரையில் சிப்பிகளை
சேகரித்து விளையாடுவேன்
நீ வந்து அலை புகும்
அந்த நொடி வரை...
தூங்காத இரவொன்றில்
கதை சொல்ல யாருமில்லை...
உறவாட உன் விழிகள்
துணையென...
கோவிலின் படிக்கட்டுகளில்
ஏறும் போதும் இறங்கும் போதும்
யாருடன் பேசி சிரிக்கிறது
உன் கால் கொலுசுகள்....
நீ புன்னகைக்கும்
ஒவ்வொரு முறையும் ஏதாவது
ஒன்றை தவறவிடுவேன்
கடந்த முறை தவறியது
நான்....
என்னைப் பற்றி
எழுதிக் கொண்டிருந்தவனுக்கு
உன்னை பற்றி
எழுதக் கற்றுக் கொடுத்த
அந்த நிமிடம் எது?