
என்னிடம் ஒரு நந்தவனம்
இருந்தது...
அதில் சில
செடிகளும்
மரங்களும்
பின்னிப் படர்ந்த கொடிகளும்
வைத்திருந்தேன்...
என் நந்தவனத்தில்
மலர்கள் இருந்தது
காய்கள் இருந்தது
கனிகளும் நிறைய
காய்ந்து போன விதைகளும்....
என் நந்தவனத்தில்
அணில்கள்
நத்தை
முயல்கள்
எறும்புகள்
ஏன் சில பாம்புகளும்...
என் நந்தவனத்தில்
ஒரு குளமும்
அதில் வண்ண மீன்களும்
நாரைகளும்
நண்டுகளும்
நீரோடையும்
கூழாங் கற்களும் ...
பறவைகளும்
ஓணான்களும்
சிறு கீரிப் பிள்ளையொன்றும்
வண்ணத்து பூச்சிகளும்
வண்டுகளும்....
ஒரே ஒரு நொடியில்
ஆழிப் பேரலையாய்
நீ அடித்து நொறுக்கும் வரை
என்னிடம் ஒரு நந்தவனம் இருந்தது
அதில்
உன் மீதான காதலும் இருந்தது...