
சொற்களால் அடிக்கப்பட்ட
கணங்கள் மிக அருகில்
இன்னும் தேவையாய்
இருக்கிறது நீ இல்லாத வலி...
நான் ஒரு பிடிவாதக்காரன்
அதனால் தானோ என்னவோ
பிடுங்கப் படும் என்
வார்த்தைகளில் விஷங்கள்...
நகக் கண்ணில் சொருகப்படும்
ஊசிகளென உன் பிரிவின்
வேதனை படரும்
நொடி துளிகள்...
கிடைக்காத பாவமன்னிப்பை
வேண்டி அனைத்துக்
கடவுளிடமும் தஞ்சம்
புகும் கோழையாய்...
மன்னிப்பவர்கள் இல்லையெனில்
எத்தனை நாள்
உயிர் வாழ்வேன் நான்
நரகத்தின் பிடியில் சிக்காமல்...
சேர்ந்து இருந்தால் என்ன
பிரிந்து சென்றால் தான் என்ன
உன்னை நினைக்காமல்
வாழ கற்றுத்தரவில்லை நீ...