
அவன் அப்படித் தான் இருந்தான்
எப்போதும் புன்னகைத்த படி
புதிர் ஒன்றுக்குக்கு விடை தேடிய படி
இல்லையெனில்
புதிர் ஒன்றை உருவாக்கியபடி
கிளிகளோடு பேசிக் கொண்டும்
செடிகளிடம் பூக்களுக்காக
வேண்டியபடியும்
நிலவோடு உறங்கவும்
வெயிலோடு விளையாடவும்
அவன் அறிந்திருந்தான்
அவன் மௌனமொழியால்
தாயிடம் பேசி தன்னை
உணர்த்தும் வல்லமையும்
அவனுக்கு இருந்தது
கிணற்றில் கர்ணம் போடுவான்
மிதிவண்டியில் குரங்கு பெடல்
ஒட்டுவான்
கரி துண்டில் சூரியனை வரைவான்...
இன்றோ
அவன் நிறைய கற்றுக் கொண்டான்
அச்சிட்ட காகிதங்களில்
அறிவைப் பெருக்கினான்
சில அல்ஜீப்ராக்களும்
பிதாகரஸ் சமன்பாடுகளும்
வரலாறும் பூகோளமும்
பிறகொரு நாளில்
கவிதை வாசித்துப் பழகினான்
எல்லாவற்றையும் தாண்டி
உதடுகளை தாண்டி
புன்னகைக்காமல் இருக்கவும்
இப்பொழுதெல்லாம்
தன உணர்வுகளைப்
புரிய வைக்க நிறைய
போராட வேண்டியிருப்பதை
உணர்ந்திருந்தான்...
அவன் உருவாக்கி இருந்தான்
அவன் தொலைந்திருந்தான்
அவன் தன்னைத் தானே
தொலைத்திருந்தான்....