பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Oct 16, 2007
உயிர்ப் பூ
இதோ இந்த நொடியில் எதோ ஒரு பெயர் தெரியாத காட்டு பூ மலர்கிறது. எதோ ஒரு மலர், தன் வண்ணங்களால் ஒரு வண்ணத்து பூச்சியை வரவேற்கிறது. இன்னுமொன்று பனிதுளிகளை தேனாக்கி வண்டுகளுக்கு பரிசளிக்கிறது... தலை அசைக்கிறது அதன் ரீங்காரத்தில்... மற்றொன்று எதோ ஒரு பெண்ணின் கூந்தலில் அழகு சேர்க்க, ஆலயங்களில் பூஜைக்கென,மணவறை அலங்கரிக்க..... இன்னும் எத்தனையோ... ஆனாலும் அடர்ந்த காடுகளில் யாரும் காணாமல் மலர்ந்து உதிரும் மலர்களின் வாழ்க்கையை பரிசளிக்கும் நீ... என் உயிர்ப் பூ...
மின்னலாக....
தனித்து துவங்கிய என் இருளில் நொடி நேர மின்னல் என என்னையும், என் பாதையையும் வெளிச்சமாக்கி போனவள் நீ..... அந்த ஒற்றை கணத்தின் விளிம்பில் நின்று கொண்டு மீண்டும் வருவாய் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது என் மனம்.... நீ தந்த ஒளியால் எனக்கு புலப்பட்ட பாதைகள் அனைத்தும் உன்னையே வந்தடைகின்றன.... இப்பொழுதெல்லாம் என் வானில் மின்னல்களை காண்பதே அரிதாகிறது.... அப்படியும் வரும் சில வேளைகளில் உன் முகம் தேடுகிறேன், அந்த வெளிச்சத்தில்... மின்னலாக வருவதே நீ என்பதை அறியாமல்....
நினைவுகள்
தினமும் உனக்கென கவிதை எழுதும் அந்த நொடிகள், உன் வரவிற்காக காத்திருந்த அந்த பொழுதுகள், தொலை பேசியில் பேசி மகிழ்ந்த கணங்கள்..... எனக்கே எனக்காக நீ அளித்து போன புன்னகைகள், என் புத்தகங்களுக்கு உன் பெயர் சூட்டிய நாட்கள், நனைவை நனைக்கும் மழை காலங்கள்.... இப்படி எத்தனையோ, மனதின் ஒரு மூலையில் பசுமையுடன்... நீ மட்டும் தான் அருகில் இல்லை, அதனால் என்ன உன் நினைவுகள் இருக்கிறதே நான் உயிர் வாழ... அது போதாதா?
கவிதையும், காதலும்
காதலாய் இருப்பதில்லை
கவிதை..
கவிதையாய் இருப்பதில்லை
கவிதையாய் இருப்பதில்லை
காதல்...
இருப்பினும்
காதலுக்குள் கவிதை இருக்கிறது
கவிதைக்குள் காதல் இருக்கிறது
வெயிலில் நடக்கும் தன் காதலியின்
பாதம் கண்டு பதறும் காதலன்
மனம் கூட கவிதை தான்...
நல்ல கவிதையின் சுகத்தில்
கண்மூடி கிடப்பவனுக்குள்ளும் காதல் தான்..
கவிதையும், காதலும் அற்ற
சமூகம் வெறும் நிலபரப்பே
இன்றி வேறு என்ன?
Subscribe to:
Posts (Atom)