
இன்று காய்ந்து போன
ரொட்டித் துண்டுகளுடன்
கடந்து போகும்
நீ நினைவு படுத்தி
கொண்டிருந்த என்
உணவு வேளைகள்...
இன்னும் உன் கரங்களால்
கிடைத்து விடாத
ஒரு வாய் உணவிற்கென
ஏங்கித் தவிக்கும்
மனதில் பிரிவின் வலி...
நேசிப்பதற்காக
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை
வெறுக்கவேனும் நினைப்பாயல்லவா
என்னை...
கனவுகளில் வாழ்ந்த
ஒவ்வொரு நிமிடங்களையும்
ஒளித்து வைத்திருக்கிறேன்
மீண்டும் வாழ்வதற்கென...
எத்தனை முறை
கோபம்
கொண்டிருந்தாலும்
இன்று நான் விலகி
நிற்பதன் காரணத்தை
தேடித் பார்
புரியும் உனக்கு...
திறந்த வெளியொன்றில்
கொட்டும் மழையில்
நனைகிறேன் என்னை
அலங்கரித்த வண்ணத்துப் பூச்சியின்
வர்ணங்கள் மெதுவாய்
கரைவதை தவிர்க்க இயலாமல்...
இனிமையான வாழ்வொன்றை
தொலைத்து விட்ட
கண நேர கோபம்
என்னைப் பார்த்து சிரிக்க
தலை குனிகிறது கர்வம்...
கண்ணீரோடு எழுதும்
எல்லா வார்த்தைகளும்
அனைவருக்கும் கண்ணீரை
கொடுத்து விட முடிவதில்லை
ஆனாலும்
உறவுகளின் துயரத்தை
சிறிதேனும்
நினைவு கொள்ள வைக்கும்...
No comments:
Post a Comment